Categories
தேசிய செய்திகள்

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு… ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தபால் அலுவலக சேமிப்புகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

அதிலும் சிலர் தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர். இந்நிலையில் தபால் அலுவலக சேமிப்புகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி தபால் நிலையங்களில் உள்ள அடிப்படை சேமிப்பு கணக்கில் இனி மாதம் 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதன்பிறகு எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் கட்டணம் அல்லது எவ்வளவு பணம் இருக்கிறீர்களோ அதில் 0.5% கட்டணம் விதிக்கப்படும். சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் 25 ஆயிரத்திற்கும் மேல் எடுக்கப்படும் பணத்திற்கு 25 ரூபாய் அல்லது அதற்கான கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |