Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… திருப்பத்தூரில் பெண்கள் சாலை மறியல்..!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மில்லத் நகர் உள்ளது. இந்த மில்லத் நகரில் 30-வது வார்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்தக் குடும்பங்களுக்கு நகராட்சியில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதிலும் சென்ற 15 நாட்களாக குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித பதிலும் நகராட்சி அலுவலகத்திலிருந்து அளிக்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேதாஜி நகர் பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |