Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக கட்சிக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று இல்லை, என்றும் என் சமூகத்தை சேர்ந்த சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பேன். யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |