மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த ஓவைசி மார்ச் 13ஆம் தேதியன்று மேற்குவங்காளத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்த உள்ளார்.
மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை, அசாதுதின் ஓவைசி ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார். இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்கை பெற்றுஉள்ளது.. பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்த கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்சி நிறைய வாக்குகளை பிரித்தது.
இதனால்தான் திரு. லாலு பிரசாத் யாதவ் கூட்டணி கட்சி அங்கு ஆட்சிக்கு வரமுடியவில்லை.
இந்தநிலையில் இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. முஸ்லிம் சமூகத்தினர் மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத், தெற்கு தினாஜ்பூர் மால்டா, வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் நிறைய உள்ளனர்.முஸ்லிம்களின் வாக்கு இக்கட்சிக்கு கிடைக்கும் என்று நம்பி அதிகளவிலான பகுதியில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தம் 22 தொகுதிகள் உள்ளன. அதில் 13 தொகுதி வேட்பாளர்களை மஜ்லிஸ் கட்சி முடிவு செய்துள்ளது. வேட்பாளர்கள் மற்ற மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.மேற்கு வங்காளத்தில் ஓவைசி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடஉள்ளார் . மார்ச் 13-ந் தேதி அவர் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். முதலில் சாகர்திகியில் தேர்தல் பிரசாரத்தை முடித்து பின்பு அவர் மேற்குவங்காளம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.