Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா…? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஹசிகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செட்டிபாளையம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |