கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து கமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று பிரதமர் மோடி தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.
இதையடுத்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ராமச்சந்திரா மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து ஒருவரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனக்காக மாத்திரமல்ல மக்களுக்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், உடல் நோய் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய் தடுப்பூசி அடுத்த மாதம் அதற்கு தயாராக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.