இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரியகாலாப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தயாளன்-அஞ்சலாட்சி தம்பதியினர். இந்நிலையில் அஞ்சலாட்சி நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அஞ்சலாட்சி குடும்பத்தினர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.