கொரோனா பரவலை தடுக்க மீண்டும் பின்லாந்து நாட்டில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பின்லாந்து நாட்டில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 7,353 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பின்லாந்து நாட்டில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.