Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒரு ஸ்பூன் பாகற்காய் ஜூஸ் உடன்…. இத கலந்து சாப்பிடுங்க….” பல நன்மைகள் வந்து சேரும்”…!!!

பாகற்காயில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம்.

பாகற்காய் என்ற பெயரைக் கேட்டவுடன் சிலருக்கு மூஞ்சியில் ஒரு வித பாவனை உருவாகும். ஏனென்றால் பாகற்காய் சிலருக்குப் பிடிக்காது. சிலர் அதன் சத்துக்களின் காரணமாக சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாகற்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பாகற்காயை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

பாகற்காயில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரு வகை உண்டு.

பாகற்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ளக்கூடியது. பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும், தாய்ப்பால் சுரக்க இது உதவும் .

பாகற்காயின் இலையை அரைத்து உடம்பில் தடவி வந்தால் நாய் கடி விஷம் உடம்பில் ஏறாது. சிரங்கு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மிகவும் நல்லது.

ஒரு கைப்பிடி பாகற்காய் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டால் மாலைக்கண் நோய் தீரும்.

இதனுடன் வெல்லத்தை சிறிது சேர்த்து நாம் சாப்பிட்டால் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களும், மூலநோய் பிரச்சினைகள் உள்ளவர்களும் தினமும் ஒரு வேளை ஒரு டீஸ்பூன் பாகற்காய் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |