நைஜிரியாவில் பயங்கரவாதிகள் 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஜான்கேபே மாகாணத்திலுள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளிக்குள் அதிக நேரம் இருப்பதற்காக வெளியில் உள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து உள்ளிருந்த தீவிரவாதிகள் 317 மாணவிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் அவர்களை தடுக்க முடியவில்லை. மேலும் 2 வாரங்களுக்கு முன் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 42 பேரை கடத்திச் சென்றுள்ளனர் அவர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில் தற்போது நடந்துள்ள சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 276 மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டதில் 100 மாணவிகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது