Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூச்சு விட முடியல…. 7 மாத கர்ப்பிணியின் முடிவு…. கதறும் கணவன்….!!

திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 2 வருடங்களுக்கு முன் சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சுமதி கற்பமாகியுள்ளார். கற்பமாகிய ஏழாவது மாதத்தில் சுமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை முத்துச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கிருந்து அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சுமதி இறந்த செய்தியைக் கேட்ட முத்துசாமி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் காவல்துறையினர் சுமதியின் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |