Categories
தேசிய செய்திகள்

கணக்கு சரியா செய்யல… மாணவியின் கையை முறித்த ஆசிரியர்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கணக்கு சரியாக செய்யாததால் மாணவியின் கையை ஆசிரியர் முறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள கூட்டமாசேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மரியாமா என்பவர் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவி கணக்கை தவறாக செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மரியானா அந்த மாணவியின் கையில் பிரம்பால் அடித்ததில் அவரின் கை வீங்கி விட்டது.

இதனையடுத்து அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு பரிசோதனை செய்தபோது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அந்த ஆசிரியை மீது புகார் அளித்தனர்.  அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மரியாமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |