தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த தகவலை கேட்ட அன்புமணி ராமதாஸ் கண்ணீர் ததும்ப அழுதார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5%உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர் களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஜாதிகள் குறித்த புள்ளி விவர சேகரிப்பு பிறகு 6 மாதம் கழித்து மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு குறித்த தகவலை பாமக நிறுவனர் ராமதாசிடம் செல்போனில் தெரிவித்தபோது அன்புமணி ராமதாஸ் கண் கலங்கினார்.