Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் ஓடிச் சென்று பெண்ணை காப்பாற்றினார்.

ரெயில் சக்கரத்தில் சிக்காமல் பெண்ணை காப்பாற்றிய காவலர்

இதையடுத்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண்ணை  காவல் துறை அதிகாரி ரயிலிலிருந்து சற்று தள்ளி நடைப்பாதைக்கு மீட்டு கொண்டு வந்தார்.மயக்க நிலையில் இருந்த பெண் எந்தவித காயமின்றி காப்பற்றப்பட்டார்.ரயில்வே காவல் துறை அதிகாரியின் இந்த வீர தீர செயலை  சக பயணிகள் வெகுவாக பாராட்டினர். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |