கனடாவில் தேவாலயத்திற்க்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக 56 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கனடாவில் உள்ள வடக்கு ஏடோபிகோகில் இருக்கும் மவுண்ட் ஒலிவ் செவந்த் டே அன்வண்டிஸ்ட் என்ற தேவாலயத்தில் கடந்த வருடம் டிசம்பர் 27-ம் தேதியன்று ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது இந்த தேவாலயத்திற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். இவரைக் கென்னித் கெயில் என்ற 56 வயதுடைய நபர் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
அதன்பின்பு அந்தப் பெண் இவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தற்போது காவல்துறையினர் கென்னித்தை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வரும் 5 ஆம் தேதி அன்று கென்னித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.