Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… கட்டிட மேஸ்திரிக்கு நடந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் ஜானகிராமன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவர் ஓரிக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வெளிங்கபட்டரை ரோடு என்ற இடத்தில் இவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜகோபாலின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |