குடும்ப பிரச்சனை காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதநாள் என்ற கிராமத்தில் சேதுபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் கோட்டைமேடு தெருவில் இருக்கும் அவரது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சேதுபாண்டியன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேதுபாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேதுபாண்டியனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.