அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு தஞ்சாவூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சடையப்பன் என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் பகுதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது.
இதனால் அந்த பேருந்தில் பயணித்த டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.