Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.என்.எல் அதிரடி ரீசார்ஜ் பிளான்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதன் அதிரடி ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.153 ரீசார்ஜ் திட்டமான இதன் செல்லுபடியாகும் காலம் (வேலிடிட்டி) 3 மாதங்கள் ஆகும். இதுவரை எந்த ரீசார்ஜ் திட்டத்திலும் 250 நிமிட அழைப்பை மட்டுமே வழங்கியது. ஆனால் இந்த புதிய திட்டத்தின்படி, பி.எஸ்.என்.எல் உள்பட அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை (அன்லிமிட்டேடு கால்) வழங்குகிறது.

அழைப்பு நன்மைகளை தவிர்த்து, இந்தத் திட்டத்தில், தினசரி 1 ஜிபி அளவிலான டேட்டா நன்மையையும் கிடைக்கிறது. குறிப்பிட்ட டேட்டா நன்மை தீர்ந்ததும், பயனர்கள் தொடர்ந்து 40 கேபிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் இணைய சேவையை அனுபவிக்கலாம். மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ்களையும் இலவசமாகப் பெறுவார்கள். தவிர இது திட்டம், தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) நன்மையையும் வழங்குகிறது. இருப்பினும், இந்த நன்மையை நீங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே பெறுகிறீர்கள்.

Categories

Tech |