Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரதமருக்கு அனுமதி… ரத்து செய்யப்பட்ட உரை நிகழ்ச்சி… மத்திய அரசின் அறிவிப்பு…!!

சர்வதேச விதிமுறைகளின்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கை நாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுற்றுப்பயணம் செல்லும் காரணத்தால் அவர் பயணிக்கும் விமானமானது இந்திய வான் வெளியில் பறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மாறாக காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு இந்திய பிரதமர் மோடி பயணம் செய்த விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு சர்வதேச விதிகளின்படி இந்தியா அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது சர்வதேச வான்வெளியை பயன்படுத்த முக்கிய தலைவர்கள் சொல்லும் விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் உரை நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்த நிலையில், அது ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை கூறும்போது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இம்ரான் கானின் உரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இம்ரான்கான் காஷ்மீர் விவகாரம் குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் பேசினால் இந்தியாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினாலேயே இந்த உரை நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒருபக்கம் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Categories

Tech |