Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து தாக்குதல்… இருவரும் என்ன ஆச்சு… அதிரடி நடவடிக்கையில் போலீசார்…!!

வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலபுதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சேகர்-விஜயா தம்பதியினர். அதே பகுதியைச் சார்ந்தவர் முத்தரசன். இவருக்கும் சேகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தரசன் தனது உறவினர்கள் 3 பேரை அழைத்துக் கொண்டு சேகரின் வீட்டிற்கு சென்று அவரை பலமாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மனைவியான விஜயாவையும் தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சேகர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முத்தரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முத்தரசன் உறவினர்கள் 3 பேரும் தப்பி ஓடியதால் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |