Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருதயாற்றில் செய்த வேலை… சோதனையில் ஈடுபட்ட போலீஸ்… 4 பேர் அதிரடி கைது…!!

மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதயாற்றில் டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒரு டிராக்டரில் 4 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த செந்தமிழ் செல்வன், அலக்சாண்டர், ஆனந்த்பாபு, குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த நான்கு பேரையும் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |