Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த செயல்… சோதனையில் கிடைத்த பொருள்… பெண் அதிரடி கைது…!!

வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் கோவிந்த புத்தூர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் பூங்கொடி என்பவர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் பூங்கொடியை கைது செய்து அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |