Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மூட்டைக்கு 46 ரூபாய் நெஞ்சம் வேண்டும்”…. மழையில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்… வேதனையில் விவசாயிகள்..!!

டலூர் மாவட்டம் வடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாமல் கிடங்கில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நினைந்து நாசமான விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

கொளக்குடியில் இயங்கிவரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கோட்டகம் மேட்டுக்குப்பம் உள்ளிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டுவந்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால் விவசாயிகள் விடிய விடிய பெய்த மழையில் அத்தனை மூட்டைகளும் நீரில் மூழ்கி விட்டதாக கூறியுள்ளனர்.

மூட்டைக்கு 46 ரூபாய் வீதம் லஞ்சம் கேட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து முறையான விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

Categories

Tech |