Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூட தான் வாழ்வேன்…! ப்ளீஸ் எனக்காக கொடு…! கணவன் என நம்பிய பெண்… பிறகு நடந்த விபரீதம் …!!

சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடமிருந்து 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தன் கணவரை சமீபத்தில் தான் விவாகரத்து செய்துள்ளார். திருமண மையத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த பெண்ணுக்கு அறிமுகமாகி உள்ளார் .அவர் தன்னை பணக்காரர் என்று கூறி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் இவர்கள் இருவருமே நன்றாக பழகி உள்ளார்கள்.

இந்நிலையில் அவர் தனக்கு மருத்துவ செலவுக்கு ரூபாய் 10 லட்சம் வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். இதனை நம்பி இந்தப்பெண்ணும் பணத்தை வங்கி கணக்கின் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.இப்பெண்  தான் ஏமாந்ததை உணர்ந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் அந்த நபர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வந்தது தெரியவந்தது. இதே போன்று பல பெண்களிடம் இவ்வாறு கூறி மோசடி செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |