விராலிமலை அருகே குன்னூர் ஊராட்சியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை வட்டத்தில் குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சியில் ரூபாய் 6,941 கோடி மதிப்பில் காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூபாய் 3,384கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்து, அதன் பிறகு அமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ்காவிரி உபரி நிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை அமைக்கும் பணிகளுக்ககும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 6,941 கோடி மதிப்பிலான முதல் கட்ட நடவடிக்கையில் அடிக்கல் நாட்ட படுவதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும் 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118 புள்ளி 45 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாயில் இருந்து கால்வாய் வெட்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு ,உடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் டாக்டர். சி .விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ,கே. டி. ராஜேந்திர பாலாஜி, எம் .ஆர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் ,வளர்மதி மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் , வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி ,கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
வெள்ளக் காலங்களில் காவிரியில்உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மற்ற பகுதிகள் வழியாக குண்டாறு டன் இணைப்பதன் மூலம் இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால கனவு நிறைவேறும் என அறிவித்துள்ளனர்.