Categories
உலக செய்திகள்

“சூப்பர் பயிற்சி”…! கொரோனாவை இப்படியும் கண்டுபிடிக்கலாம்… “மோப்ப நாய்கள்” மூலம் புதுமுயற்சி…!

பொது இடங்களில் கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு மோப்ப நாயின் மூலம் புதிய ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பொது இடங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு மோப்ப நாய்கள் மூலம் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தொடங்கிய இந்த சோதனை முயற்சியில் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட 2000 இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த மோப்ப நாயின் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனாவை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது மனிதர்களின் கழுத்துப் பகுதியில் அல்லது அக்குள்களில் இருந்து வரும் வியர்வையை ஒரு துணியால் துடைத்து குறிப்பிட்ட இடத்தில் போட்டு விடுவார்கள்.

பயிற்சி பெற்ற மோப்ப நாய் அந்தத் துணிகளை மோப்பம் செய்து அதில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை கண்டறிந்து தனது பயிற்சியாளரிடம் தெரிவிக்கும். இதற்கு முன்பாக மோப்ப நாயை வைத்து செய்த சோதனை முயற்சியில் நல்ல விளைவுகள் கிடைத்துள்ளது. மேலும் அடுத்த கட்ட சோதனை துவங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக மனிதனின் வேர்வை மட்டுமல்லாமல், அவர்கள் அணிந்திருக்கும் மாஸ்கை வைத்தேன் மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டறியும் சோதனைகளை மேற்கொள்ளவும் ஆய்வாளர்கள் திட்டமீட்டுள்ளனர்.

Categories

Tech |