பரிட்சையில் பிட் அடித்ததற்காக ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஜய்பிரகாஷ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் விஜய்பிரகாஷ் பிட் அடித்ததற்காக ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார்.
இதனால் விஜய்பிரகாஷ் மனமுடைந்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் விஜய் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.