Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல…தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி ஐயன் பெருமாள் கொத்தன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீடு பூட்டிக்கிடந்துள்ளது. ஆதலால் அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் கிழக்கு போலீசார் பிரகாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |