குஜராத் மாநிலத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் வகையில் காதலர் மையம் அமைக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வடோதரா மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் வகையில் காதலர் மையம் அமைக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார். இளைஞர்கள் தங்களது பெண் தோழிகளுடன் பொழுதுபோக்க காபி ஷாப்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது காதல். அதை இளைஞர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த காபி ஷாப்கள் அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.