Categories
தேசிய செய்திகள்

பிக் பேஸ்கெட் நிறுவனத்தை விலைக்கு வாங்க போகிறதா..? டாடா நிறுவனம்..!!

பன்னாட்டு நிறுவனமான டாடா, கால் பதிக்காத துறையே இல்லை என்று கூறி விட முடியும். அந்தளவுக்கு மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து துறைகளிலும், டாடா நிறுவனம் புகுந்து விட்டது.

தற்போது பிக் பேஸ்கெட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஆன்லைன் முறையில் மளிகை பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தில், 63 சதவீதம் பங்குகளை வாங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில், 8747 கோடி ரூபாய். இந்த விற்பனையின் மூலம், ஏற்கனவே பிஸ் பேஸ்கெட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சீன நிறுவனமான அலிபாபா வெளியேறுகிறது. அலிபாபா நிறுவனம் 27 சதவீதம் பங்குகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு புகார்களில் சிக்கியிருக்கும் அப்ராஜ் நிறுவனமும், தன்னிடம் இருக்கும் 18 சதவீதம் பிக் பேஸ்கெட் பங்குகளை விற்று வெளியேறுகிறது. இதற்கான முறைப்படியான அனுமதியை எதிர்பார்த்து, டாடா மற்றும் பிக் பேஸ்கெட் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

Categories

Tech |