Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தண்ணி அடிக்க பணம் இல்ல… மனமுடைந்த கொத்தனாரின் முடிவு… கதறும் மனைவி…!!

மது வாங்க பணம் இல்லாததால் கொத்தனார் தீக்குளித்த தற்கொலை செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் கொத்தனார் வீராசாமி வசித்து வந்தார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் மது அருந்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால் மனமுடைந்த வீராசாமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த வீராசாமிக்கு டாக்டர் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வீராசாமியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |