Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தடுப்பூசியை திருட முயன்ற வடகொரியா… வெளியான பரபரப்பு தகவல்…!

அமெரிக்காவின் தடுப்பூசி தகவலை வடகொரியா திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி வரும் நிலையில் வடகொரியாவில் ஒருவர் கூட இன்னும் கொரனோவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜனாக தடுப்பூசியின் 2 மில்லியன் டோஸ்களை வடகொரியா எதிர்பார்த்து இருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி வட கொரியாவிற்கு 1,992,000 டோஸ்களை ஆசிய நாடுகள் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்பத் தகவல்களை திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசரின் சர்வர்களை வடகொரியா ஹேக் செய்ய முயன்றதாக தகவல் வெளியிடப்பட்டது. இத்தகவலை நாடாளுமன்ற புலனாய்வுக் குழுவின் மூடிய கதவு அமர்வின் போது தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |