Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தந்தையின் வார்த்தை… காயப்பட்ட மகன் எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பம்…!!

தந்தை திட்டியதால் வாலிபர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சேட்டு. வெங்கடேசன் அவருடைய மகனான சேட்டுவை வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் சேட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |