போலீஸ் காவலில் கைதி மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீஸ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி விசாரிக்க நீதிபதி நாராயண குரூப் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது விசாரணையை முடித்து 150 பக்கங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தது .இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி விஜயன் தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணிநீக்கம் செய்து முடிவு வழங்கப்பட்டது.