தமிழகம் உட்பட அனைத்து நாடுகளிலும் தாமரை மலரும் என்று திரிபுரா முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் இது குறித்து கூறியதாவது, மாநில விருந்தினர் மாளிகையில் கட்சிக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பாஜக பல மாநிலங்களில் அரசாங்கத்தை அமைத்துள்ளது என்று பாஜகவின் வட கிழக்கு மண்டல செயலாளர் அஜய் ஜம்வால் கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இலங்கை மற்றும் நேபாளம் எஞ்சியுள்ளது என்று அமித்ஷா கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திரிபுரா முதலமைச்சர், கேரளாவில் பாஜக அதன் தலைமை அரசாங்கத்தை நிறுவுவதற்காக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வரவிருக்கும் தேர்தலில் மேற்கு வங்க மக்கள் டி.எம்.சி தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்புவார்கள். அதன்பின் தமிழகம் உட்பட அனைத்து நாடுகளிலும் “தாமரை மலரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.