தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவ நிலையங்களில் செவிலியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவ நிலையங்களில் செவிலியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவியர்கள் இன்றுமுதல் http://www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 21 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.