Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி எடுத்த சூப்பர் புகைப்படம்… செம VIRAL…!!!

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் பறந்தபடியே எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட “அர்ஜுன் மாக் 1 ஏ”என்ற ராணுவ பீரங்கியை நாட்டுக்காக அவர் அர்ப்பணித்தார். இந்த பீரங்கி 71 புதிய வசதிகளை கொண்டுள்ளது. பீச் சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி ஆகும். இதனையடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு அவர் விமானத்தில் பறந்தபடியே எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் போட்டியை விமானத்திலிருந்து புகைப்படம் எடுத்துள்ளார். பறந்தபடியே சுவாரசியமான போட்டியை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |