Categories
உலக செய்திகள்

போற போக்கில் ஒரு காட்டு காட்டிய கரடி…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ…!

கரடிகளை காட்டுக்குள் திறந்து விடுவதை நிகழ்ச்சியாக நடத்திய இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈராக்கில் வீடுகளில் கூண்டில் வளர்க்கப்பட்ட 6 கரடிகளை அதிகாரிகள் மீட்டனர். அதனை வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். ஆனால் இது ஒரு சாதாரண நிகழ்வாக நடத்தாமல் ஒரு நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஊடகவியலாளர்களையும் அழைத்தனர். கரடிகள் காட்டுக்குள் செல்வதை ஆவலாக கண்டு கழிக்க வந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர்.

ஏனென்றால் கரடிகள் காட்டுக்குள் செல்லாமல் மக்களை நோக்கி வந்தது. ஒருவழியாக அந்த கரடி சிலர் காட்டுக்குள் விரட்டினர். அதன்பின் அனைவரும் பெருமூச்சு விட்டு அவர்கள் அவர்களது வீட்டுக்கு சென்றனர். இதனுடைய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Categories

Tech |