Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் தங்குவது ஆபத்து… இனிமேதான் வேகமா பரவும்… தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை…!

பிரிட்டனில் ஹோட்டல்களில் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியாவின் தொற்று நோய் நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியருமான மைக்கேல் டூல், பிரிட்டனில் தனிமை படுத்த பட்ட ஹோட்டல்களில் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பயணிகள் தங்கள் அறையை விட்டு வெளியேறுவது அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆஸ்திரியாவில் கொரோனா ஆரம்ப கட்டத்திலேயே மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முகக் கவசம் அணிவது, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் சொல்வது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வைரஸை காற்றில் பரவுவதை தடுக்காது.

ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனது அறையின் கதவை திறந்துள்ளார். அவரிடம் இருந்த தொற்று வைரஸ் காற்றின் மூலம் பயணித்து ஹோட்டல் ஊழியருக்கு பரவியது. இதனால் பிரிட்டனில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களில் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பயணிகள் தங்கள் அறையை விட்டு வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |