Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உங்களுக்கு நான் உதவி பண்றேன்… நம்பி ஏமார்ந்த பெண்… நூதன முறையில் திருடப்பட்ட பணம்…!!

பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக கீழரத வீதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஏ.டி.எம் எந்திரத்தில் அவரது கார்டு சரியாக அமையாத காரணத்தால் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த முகக் கவசம் அணிந்த ஒரு மர்ம நபர் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய லட்சுமி தான் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டை அந்த நபரிடம் கொடுத்துவிட்டார்.

அந்த கார்டை வைத்துக்கொண்டு அந்த நபர் 20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு லட்சுமியிடம் உங்கள் கணக்கிலிருந்து பணம் வரவில்லை என பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து உடனடியாக தப்பி சென்று விட்டார். அவர் கூறியது உண்மை என்று நம்பிய லட்சுமி வீட்டிற்கு சென்ற பிறகுதான் 20 ஆயிரம் ரூபாய் தனது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |