விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் 40 கோடி ரூபாயை செலவழித்து உள்ளன.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பாடகியான ரெஹானாவும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் 40 கோடி ரூபாய் செலவழித்து உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சூப்பர் பவுல் எனப்படும் சாம்பியன்ஷிப் கால்பந்து விளையாட்டு போட்டி மிகவும் பிரபலம் வாய்ந்தது.
இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு இடையில் 30 நொடிகளுக்கு விளம்பரம் ஒளிபரப்பப்படும். அதற்கு 40 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடகி ரெஹானா பதிவிட்டுள்ள ட்விட் குறித்தும் அதனால்,இந்தியாவில் கிளம்பிய எதிர்ப்புகள் குறித்தும் அந்த விளம்பரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படுவதாக கூறி அமெரிக்க மக்களின் ஆதரவைக் கோரும் வகையில் அந்த விளம்பரங்கள் உள்ளது.