காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.
இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதையடுத்து காலியாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் தற்போது அருண்குமார் சின்கா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் காவிரி ஆணைய கூட்டத்தை அருண்குமார் சின்கா நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.