நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவின் கரைக்கு அடுத்துள்ள கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டயட் உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மாலுமிகளுக்கு மிகவும் ஆபத்தான கினியா வளைகுடாவில் பனாமா கொடியுடன் பயணித்த மரியா இ டேங்க் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதல் 12: 22 GMT மணி அளவில் ஸோ டோம்மின் வடமேற்கில் 108 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடந்துள்ளது.
பனாமா கொடியுடன் பயணித்த கப்பல் கிரீஸ் நிறுவனமான லோட்டஸ்க்கு சொந்தமானது என்று இணையத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது மீன்பிடி கப்பல் என்னை கப்பலுக்கு அருகில் இருந்துள்ளது. இதிலிருந்து தெரிகிறது என்னவென்றால், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி கடற்கொள்ளையர்களால் லியன்பெங்கு கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.