Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு சந்தோசமான செய்தி… உங்களுக்கும் ரத்து செய்யப்படும்… அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு…!!

அமைச்சர் செங்கோட்டையன் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் திருமண உதவி தொகை, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் மின்னணு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியானது அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல், சுய உதவி குழுக்களின் கடன் ரத்து செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தொலைநோக்கு சிந்தனையோடு பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது எனவும், இன்னும் பல்வேறு வகையான திட்டங்கள் மக்களை சென்றடையும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |