Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முதல்வர் வரும் நேரம்…! இப்படி செய்யலாமா ? ரூ.5000 அபராதம் போட்ட மாநகராட்சி …!!

முதல்வர்  வரும் நேரத்தில் மரக்கழிவுகளை  தீயிட்டு கொளுத்திய நபருக்கு வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் ரூ.5000 அபராதமாக விதித்தனர். 

வேலூர் மாவட்டம்  கிரீன் சர்கில் சர்வீஸ் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகாமையில், நேற்று காலை 11 மணிக்கு அந்த  பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அவருடைய சொந்த நிலத்தில் வெட்டப்பட்ட  மரத்தின்  கழிவு துண்டுகளை   தீயிட்டு எரித்துள்ளார். இந்த நெருப்பானது பெரிய அளவில் பற்றி  எரிந்தது.

இதனால் உருவான  அதிகமான புகையை அப்பகுதியில்  சென்ற மாநகராட்சி அலுவலர்கள் கவனித்து முதல்வர் வரும் நேரத்தில் இதுபோல்  சுற்றுப்புற சூழலுக்கு கேடு  ஏற்படும் விதமாகவும், பொதுமக்களுக்கு இடைஞ்சல்  ஏற்படுத்தும் விதமாகவும்  நடந்துகொண்டதாக கூறி மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணையர் மதிவாணன், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் ரவி என்பவருக்கு  ரூ.5,000 அபராதம் விதித்தார் .

Categories

Tech |