தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறிய பனியன் நிறுவன கம்பெனியை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் பனியன் நிறுவன தொழிலை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக ஏற்பட்ட கடன் தொல்லை காரணத்தால் கணேசன் அந்த தொழிலை விட்டுள்ளார்.
இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த கணேசன் அந்த பனியன் நிறுவனத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.