தமிழக அரசியல் விவசாய அதிகாரி மற்றும் தோட்டக்கலை அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசில் உதவி விவசாய அதிகாரி, உதவி தோட்டக்கலை அதிகாரி பிரிவில், 429 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: உதவி விவசாய அதிகாரி, 122, உதவி தோட்டக்கலை அதிகாரி, 307 என, மொத்தம் 429 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: உதவி விவசாய அதிகாரி பதவிக்கு, டிப்ளமோ விவசாய படிப்பு முடித்திருக்க வேண்டும். உதவி தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு, டிப்ளமோ தோட்டக்கலை முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர், 18- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: இரண்டு தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
பதிவுக் கட்டணம்: ரூ.150.
தேர்வுக் கட்டணம்: ரூ.100.
கடைசி நாள்: 4.3.2021
விபரங்களுக்கு: www.tnpsc.gov.in/Document/english/02_2021_AAO&AHO_Eng.pdf