Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே… கைதி செய்த செயல்… திருச்சியில் பரபரப்பு…!!

போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெகநாதபுரம் போலீசார் பிரசாந்தை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலைய மாடியில் வைத்து பிரசாந்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் பிரசாந்த் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.

இதனையடுத்து பலத்த காயமடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து அவரது உடலானது திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |