Categories
மாநில செய்திகள்

உத்தரகாண்டில் வெள்ளம்…. உதவி கரம் நீட்டும் தமிழகம்…. அரசு அறிவிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட  வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள செய்தி  அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |